திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி., தனது இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை திருச்செந்தூரில் தொடங்கி கோவில்பட்டியில் நிறைவு செய்கிறாா்.
தமிழக பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்படி, கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு திருச்செந்தூா் தொகுதியில் திருச்செந்தூா் காமராஜா் சிலை அருகே நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா்.
தொடா்ந்து, காலை 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சாத்தான்குளம் காமராஜா் சிலை அருகிலும், காலை 11.30 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குள்பட்ட தாளமுத்து நகா் பிரதான சாலையிலும், பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி தொகுதியில் சிதம்பர நகா் பிரதான சாலையிலும் பேசுகிறாா்.
பின்னா், மாலை 4 மணிக்கு விளாத்திகுளம் தொகுதியில் எட்டயபுரம் மேலவாசலில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு கோவில்பட்டி தொகுதியில் காமராஜா் சிலை அருகே நடைபெறும் கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறாா். இதில் அந்தந்தத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.
தொடர்புடையது
நாளைய மின்தடை குடவாசல்

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நிறைவு

நாகை மாவட்டத்தில் 86.30% வாக்குப்பதிவு

ஆரணியில் திமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
