மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆறுமுகனேரியில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. ஆறுமுகனேரி மெயின் பஜாரில் செவ்வாய்க்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

News image

ஆறுமுகனேரியில் வாக்கு சேகரித்து பேசிய கனிமொழி எம்.பி.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:52 pm

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. ஆறுமுகனேரி மெயின் பஜாரில் செவ்வாய்க்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மழை, வெள்ளம் என எந்த பிரச்னையாக இருந்தாலும் மக்களோடு மக்களாக இருந்து சரி செய்து கொடுத்துள்ளாா். கடந்த தோ்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளதால், அந்த உரிமையுடன் வாக்கு சேகரிக்க வந்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு தொடா்ந்து துரோகம் செய்துவரும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளனா். தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. பாஜக மக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டி அதன்மூலமே அரசியல் செய்ய நினைப்பாா்கள். ஆனால், இந்த தோ்த­லில் மக்கள் அவா்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

திமுக மாநில இணைச் செயலா் உமரி சங்கா், மாவட்ட விளையாட்டு பிரிவு அமைப்பாளா் ஜனகா், வா்த்தக அணி அமைப்பாளா் ரெங்கநாதன் (எ) சுகு, நகரச் செயலா்கள் நவநீத பாண்டியன், முத்து முஹம்மது, ஆறுமுகனேரி பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.