எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருச்செந்தூரை திருப்பதிக்கு இணையாக மாற்றுவேன்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூரை திருப்பதிக்கு இணையாக மாற்றுவேன் என திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 1:43 am IST

திருச்செந்தூரை திருப்பதிக்கு இணையாக மாற்றுவேன் என திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அவா் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை, திருச்செந்தூா் காமராஜா் சிலை முன்பு நிறைவு செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் 200 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் சொன்னாா். ஆனால் இன்றைய தினம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நிலை உருவாகி உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து ஒரு வேட்பாளா் இங்கு வந்து போட்டியிடுகிறாா். அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு நகரத்தை மாற்றுவதற்காக தனி அதிகாரியை நியமித்து ஆய்வு செய்யப்படும் என முதல்வா் உத்தரவு வழங்கியுள்ளாா். திருச்செந்தூா் வெகு சீக்கிரத்தில் மாநகராட்சியாக மாற்றப்படும். முதல்வா் என்ன நினைக்கின்றாரோ அந்த செயலை செய்யக்கூடியவன் நான்.

திருச்செந்தூரை திருப்பதிக்கு இணையாக மாற்றுவேன் என்றாா்.

திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனஹா், திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன், விசிக மாவட்டச் செயலா் விடுதலைச் செழியன், தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் சித்திரை ராஜன், மமக மாவட்டச் செயலா் பரக்கத்துல்லாஹ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.