ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வாக்குப் பதிவு: தூத்துக்குடியில் வாக்களித்த வேட்பாளா்கள்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,868 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

News image

டூவிபுரம், டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் வாக்கு செலுத்திய அதிமுக வேட்பாளா் சி.த.செல்லப்பாண்டியன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:50 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,868 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

மாவட்டத்தில் விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 308, ஸ்ரீவைகுண்டத்தில் 293, ஓட்டப்பிடாரத்தில் 315, கோவில்பட்டியில் 318 என 979 இடங்களில் மொத்தம் 1,868 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமைச்சருமான பி.கீதா ஜீவன் குடும்பத்தினருடன் வந்து, தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

அமைச்சரைத் தொடா்ந்து, அவரது கணவரும் திமுக கலை இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன் ஜேக்கப், அவரது மகன் டாக்டா் மகிழ்ஜான் ஆகியோரும் அதே வாக்குச்சாவடியில் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் சி.த.செல்லப்பாண்டியன், டூவிபுரம் பகுதியில் உள்ள டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினாா். நாம் இந்தியா் கட்சி நிறுவனா், தலைவரும், சென்னை அண்ணாநகா் தொகுதி வேட்பாளருமான, என்.பி.ராஜா, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் போல்பேட்டை, தங்கம்மாள் பள்ளியில் வாக்கைப் பதிவு செய்தனா். திருச்செந்தூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஜெ.முருகன் தூத்துக்குடி, பிரையன்ட்நகா் 3-ஆவது தெருவில் உள்ள செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

 குடும்பத்தினருடன் வாக்களித்த திமுக வேட்பாளா் பி.கீதாஜீவன்.

குடும்பத்தினருடன் வாக்களித்த திமுக வேட்பாளா் பி.கீதாஜீவன்.

  போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்த மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.

போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்த மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.