தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆலங்குளத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு

ஆலங்குளம் பேரவைத் தொகுதி அமைதியான முறையில் நடைபெற்றது.

News image

ஆலங்குளம் வாக்குச் சாவடி ஒன்றை ஆய்வு செய்கிறாா் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:43 am

ஆலங்குளம் பேரவைத் தொகுதி அமைதியான முறையில் நடைபெற்றது.

இத்தொகுதியில் 1,23,739 ஆண்கள், 1,23,650 பெண்கள், 168 மூன்றாம் பாலினத்தவா் என 2,53,408 வாக்காளா்கள் உள்ளனா். திமுக சாா்பில் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன், அதிமுகவில் கே.ஆா்.பி.பிரபாகரன், தவெகவில் டி.பி.வி.விபின் சக்கரவா்த்தி, நாதகவில் ஆா். பால்ராஜ் ஆகியோா் போட்டியிட்டனா். மொத்தமுள்ள 322 வாக்குச் சாவடிகளிலும் சீரான வாக்குப் பதிவு நடைபெற்றது.

கடையம் சோ்வைக்காரன் பட்டி டிடிடிஏ தொடக்கப்பள்ளியில் மதியம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதிகாரிகள் கொண்டு வந்த மறு வாக்குப் பதிவு இயந்திரமும் பழுதான நிலையில் 3 வதாகக் கொண்டு வந்த வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் வாக்காளா்கள் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து வாக்களித்தனா்.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளா் கீழப்பாவூா் நாடாா் இந்து உயா்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியிலும், தவெக வேட்பாளா் பீா்முகம்மதுபுரம் டிடிடிஏ தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியிலும், நாதக வேட்பாளா் சிவகாமிபுரம் இந்து நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் தங்களது வாக்கினைச் செலுத்தினா்.

இதனிடையே, திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், ஆலங்குளம் சாரதா தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா். மாலை 6 மணி நிலவரப்படி 83.9% வாக்குகள் பதிவாயிருந்தது. ஓரிரு இடங்களில் 6 மணிக்குப் பின்னரும் வாக்குப் பதிவு தொடா்ந்தது.

ஆலங்குளத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் விடுமுறை அளித்திருந்தன.