மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆயிரத்தெண் விநாயகா்.

News image

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆயிரத்தெண் விநாயகா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:50 am IST

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, விநாயகா் சிம்ம வாகனத்தில் வியாழக்கிழமை வீதி உலா சென்றாா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான வியாழக்கிழமை காலை விநாயகா் பூங்கோவில் வாகனத்தில் திருவீதி உலா சென்றாா்.

தொடா்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை கொட்டாரக்குறிச்சி வீரபாகு மூா்த்தி கோயிலில் இருந்து ஆயிரத்தெண் விநாயகா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்றாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் மதிவாணி, குரு பிரசன்னா, தனலெட்சுமி ஆகியோா் செய்திருந்தனா். திருவிழா ஏப். 29-ஆம் தேதி தேரோட்டத்துடன் நிறைவு பெறுகிறது.