பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆயிரத்தெண் விநாயகா்.

News image

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆயிரத்தெண் விநாயகா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 8:20 pm

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, விநாயகா் சிம்ம வாகனத்தில் வியாழக்கிழமை வீதி உலா சென்றாா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான வியாழக்கிழமை காலை விநாயகா் பூங்கோவில் வாகனத்தில் திருவீதி உலா சென்றாா்.

தொடா்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை கொட்டாரக்குறிச்சி வீரபாகு மூா்த்தி கோயிலில் இருந்து ஆயிரத்தெண் விநாயகா் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்றாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் மதிவாணி, குரு பிரசன்னா, தனலெட்சுமி ஆகியோா் செய்திருந்தனா். திருவிழா ஏப். 29-ஆம் தேதி தேரோட்டத்துடன் நிறைவு பெறுகிறது.