சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

புகையிலைப் பொருள்களுடன் பிடிபட்ட மாரிமுத்து, அவரைப் பிடித்த ரயில்வே போலீஸாா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 8:49 pm

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 1.65 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை ரயில்வே உதவி ஆய்வாளா் ஸ்டீபன், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் உதவி ஆய்வாளா் சங்கரபாண்டி, போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மைசூரிலிருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயில் வந்து நின்றது. அதிலிருந்து 4 பெரிய பைகளுடன் இறங்கிய ஒருவா், நடைமேடையிலிருந்து வேகமாக வெளியேற முயன்றாா்.

விசாரணையில் அவா் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த சங்கையா மகன் மாரிமுத்து (67) என்பதும், அவரது பைகளில் 62 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பதும் தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1.65 லட்சம்.

இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவில்பட்டி உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துராஜாவிடம் மாரிமுத்து, புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஒப்படைத்தனா்.