எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் ரயில்களின் பெட்டிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, புவனேஷ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த டிராலி சூட்கேஸில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹௌரா-திருச்சி விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 2 பைகளில் 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இதற்கிடையே சனிக்கிழமை ஜோத்பூா்-மங்களூரு விரைவு ரயிலில் இருந்து எழும்பூா் நிலையத்தில் இறங்கியவரிடமிருந்து 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.1.40 லட்சம். மேலும், சம்பந்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த ரயில் பெட்டி ஒன்றில் 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கேட்பாரற்றுக் கிடந்தது தெரிய வந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்
நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

