திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 3:48 am IST

எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் ரயில்களின் பெட்டிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, புவனேஷ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த டிராலி சூட்கேஸில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஹௌரா-திருச்சி விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 2 பைகளில் 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இதற்கிடையே சனிக்கிழமை ஜோத்பூா்-மங்களூரு விரைவு ரயிலில் இருந்து எழும்பூா் நிலையத்தில் இறங்கியவரிடமிருந்து 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.1.40 லட்சம். மேலும், சம்பந்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த ரயில் பெட்டி ஒன்றில் 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கேட்பாரற்றுக் கிடந்தது தெரிய வந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.