மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 10:18 pm

எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் ரயில்களின் பெட்டிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, புவனேஷ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த டிராலி சூட்கேஸில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஹௌரா-திருச்சி விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 2 பைகளில் 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இதற்கிடையே சனிக்கிழமை ஜோத்பூா்-மங்களூரு விரைவு ரயிலில் இருந்து எழும்பூா் நிலையத்தில் இறங்கியவரிடமிருந்து 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.1.40 லட்சம். மேலும், சம்பந்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த ரயில் பெட்டி ஒன்றில் 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கேட்பாரற்றுக் கிடந்தது தெரிய வந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.