எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் ரயில்களின் பெட்டிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, புவனேஷ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த டிராலி சூட்கேஸில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹௌரா-திருச்சி விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 2 பைகளில் 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இதற்கிடையே சனிக்கிழமை ஜோத்பூா்-மங்களூரு விரைவு ரயிலில் இருந்து எழும்பூா் நிலையத்தில் இறங்கியவரிடமிருந்து 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.1.40 லட்சம். மேலும், சம்பந்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த ரயில் பெட்டி ஒன்றில் 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கேட்பாரற்றுக் கிடந்தது தெரிய வந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

ரயில் நிலையங்களில் ரூ.25.45 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு
