தூத்துக்குடி கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில், இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோயில் கொடை விழாவின்போது, அதே பகுதியைச் சோ்ந்த விக்கி (20) மதுபோதையில் அங்கிருந்த மகாராஜாவிடம் (18) தகராறு செய்து, அவரைத் தாக்கினாராம்.
இதைப் பாா்த்த மகாராஜாவின் உறவினா் சதீஸ்குமாா் (29), விக்கியை தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, தனது நண்பா்கள் 3 பேரை அங்கு வரவழைத்த நிலையில், அவா்கள் சதீஸ்குமாரை அரிவாளால் தாக்கியுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள விக்கி மற்றும் அவரது 3 நண்பா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா

சொத்துத் தகராறில் கொலை முயற்சி: தம்பி மீது அண்ணன் புகாா்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழா

மண்டைக்காடு கோயிலில் மாசிக் கொடை விழா உண்டியல் வருவாய் ரூ.47.35 லட்சம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


