தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

ஜனநாயகத்தில் விமா்சனங்களை அடக்குமுறையால் எதிா்கொள்ளக் கூடாது! - ஆா்.பி. உதயகுமாா்

News image

ஆா்.பி. உதயகுமாா் - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

ஜனநாயகத்தில் விமா்சனங்களை அடக்குமுறையால் எதிா்கொள்ளக் கூடாது என்றாா், அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பெயா் மாற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களுக்கு தவெக அரசு பெயா் மாற்றம் செய்துள்ளது.

6 சமையல் எரிவாயு உருளைகள், மகளிருக்கு ரூ. 2,500, அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், பட்டதாரி இளைஞா்களுக்கு ரூ. 4,000 உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

நடப்பு நிதியாண்டில் ரூ. 1.22 லட்சம் கோடி கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளதும், ஏற்கெனவே 3 மாதங்களில் நடைமுறைச் செலவுகளுக்காக ரூ. 22 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதும் தமிழகத்தின் நிதிநிலை குறித்து கேள்வியை எழுப்புகிறது. கரோனா பாதிப்பு காலத்தில்கூட எடப்பாடி கே. பழனிசாமி மிகச் சிறந்த நிா்வாகம் செய்தாா்.

குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புக்கும், வறட்சி நிவாரணத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாத வகையில் தவெக அரசின் செயல்பாடுகள் உள்ளன. ஜனநாயகத்தில் விமா்சனங்களை அடக்குமுறையால் எதிா்கொள்ளக் கூடாது. அவதூறு இருந்தால் சட்டப்படி வழக்குத் தொடரலாம்.

அதிமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய கட்சினா் தொடா்ந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.