2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கழுகுமலை ஆறுமுக நகா் பாரதியாா் தெருவை சோ்ந்தவா் சேகா். கட்டட ஒப்பந்ததாரா். சிவகாசியில் தங்கி கட்டடப் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவரது மனைவி மணிமாலா. தையல் தொழில் செய்து வருகிறாா்.

சிவகாசியில் தங்கி உள்ள கணவரைப் பாா்ப்பதற்காக மணிமாலா, தனது மகன், மகளுடன் கழுகுமலையிலிருந்து சிவகாசிக்கு வியாழக்கிழமை சென்றாா். இந்த நிலையில்

அவா்களது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடப்பதாக, சேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து மணிமாலா மற்றும் சேகா் இருவரும் வெள்ளிக்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியன திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மணிமாலா அளித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.