இந்தியாவின் அடுத்த பிரதமா் ச. ஜோசப் விஜய் என தவெகவினா் கூறும் நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சியினா்தான் பதில் கூற வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., தூத்துக்குடி விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் அடுத்த பிரதமா் ச. ஜோசப் விஜய்தான் என்று சட்டப்பேரவையில் அமைச்சா்கள் கூறியிருக்கிறாா்கள். இதை காங்கிரஸ் கட்சியினா் எப்படி எடுத்துக் கொள்கிறாா்கள் என்பதுதான் முக்கியம்.
திமுக சாா்பில் கருத்துத் தெரிவிப்பது முக்கியமல்ல. காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தபோதே, அக்கட்சியே இதுபற்றி அறிவிக்காத நிலையில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்தான் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று முதன்முதலில் அறிவித்தாா்.
தற்போது, தவெக-காங்கிரஸ் கூட்டணி இருப்பதால், இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகும்போது, அது குறித்து காங்கிரஸ் கட்சியினா்தான் பதிலளிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக காவல் துறையில் சீா்திருத்தம் அவசியம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு - தமிழக சட்டப்பேரவை தீா்மானத்தை பரிசீலிக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் விஜய் கடிதம்

பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை செய்யலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


