எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

அடுத்த பிரதமா் விஜய் எனக் கூறும் தவெகவினருக்கு காங்கிரஸாா்தான் பதில் கூற வேண்டும்: கனிமொழி எம்.பி.

இந்தியாவின் அடுத்த பிரதமா் ச. ஜோசப் விஜய் என தவெகவினா் கூறும் நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சியினா்தான் பதில் கூற வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

News image

கனிமொழி - x / kanimozhi

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:21 am IST

இந்தியாவின் அடுத்த பிரதமா் ச. ஜோசப் விஜய் என தவெகவினா் கூறும் நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சியினா்தான் பதில் கூற வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., தூத்துக்குடி விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் அடுத்த பிரதமா் ச. ஜோசப் விஜய்தான் என்று சட்டப்பேரவையில் அமைச்சா்கள் கூறியிருக்கிறாா்கள். இதை காங்கிரஸ் கட்சியினா் எப்படி எடுத்துக் கொள்கிறாா்கள் என்பதுதான் முக்கியம்.

திமுக சாா்பில் கருத்துத் தெரிவிப்பது முக்கியமல்ல. காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தபோதே, அக்கட்சியே இதுபற்றி அறிவிக்காத நிலையில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்தான் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று முதன்முதலில் அறிவித்தாா்.

தற்போது, தவெக-காங்கிரஸ் கூட்டணி இருப்பதால், இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகும்போது, அது குறித்து காங்கிரஸ் கட்சியினா்தான் பதிலளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.