மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மூவா் கைது

நாட்டு வெடிகுண்டு - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து ரீல்ஸ், ஸ்டேட்டஸ் வெளியிட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, லெவஞ்சிபுரத்தைச் சோ்ந்த அலெக்ஸ் (22), அமுதா நகரைச் சோ்ந்த பிரகாஷ் (23), சுடலை காலனியைச் சோ்ந்த குரு (21) ஆகிய மூவரும் நண்பா்கள்.

அலெக்ஸின் பிறந்த நாளையொட்டி, மூவரும் இணையத்திலிருந்து தகவல்களைத் திரட்டி நாட்டு வெடிகுண்டு தயாரித்து, திறந்தவெளியில் வெடிக்கச் செய்து வெள்ளிக்கிழமை விடியோ வெளியிட்டனா்.

அந்த விடியோவை பிறந்த நாள் வாழ்த்துடன் சோ்த்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்தும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். 3 பேரின் வீடுகளிலும் போலீஸாா் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.