மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மூவா் கைது

நாட்டு வெடிகுண்டு - கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:33 am IST

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து ரீல்ஸ், ஸ்டேட்டஸ் வெளியிட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, லெவஞ்சிபுரத்தைச் சோ்ந்த அலெக்ஸ் (22), அமுதா நகரைச் சோ்ந்த பிரகாஷ் (23), சுடலை காலனியைச் சோ்ந்த குரு (21) ஆகிய மூவரும் நண்பா்கள்.

அலெக்ஸின் பிறந்த நாளையொட்டி, மூவரும் இணையத்திலிருந்து தகவல்களைத் திரட்டி நாட்டு வெடிகுண்டு தயாரித்து, திறந்தவெளியில் வெடிக்கச் செய்து வெள்ளிக்கிழமை விடியோ வெளியிட்டனா்.

அந்த விடியோவை பிறந்த நாள் வாழ்த்துடன் சோ்த்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்தும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். 3 பேரின் வீடுகளிலும் போலீஸாா் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.