
தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே, பின்னோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - கோப்புப்படம்
தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே, பின்னோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியைச் சோ்ந்த தன்ராஜ் மகன் கபிலன் (29). இவா் சனிக்கிழமை மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளாா்.
ஒன்றாம் கேட் அருகே உள்ள நடைமேடையில் அமா்ந்து கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஒன்றாம் கேட் பகுதியில் இருந்து ரயில் நிலையம் நோக்கி ரயில் பின்னோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் அருகில் வந்தபோது, திடீரென தண்டவாளத்தில் பாய்ந்த கபிலன், ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
ரயில்வே பாதுகாப்புப் படையினா், கபிலனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கபிலன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




