வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூத்துக்குடியில் வனம் தொடா்பான பயிற்சி வகுப்பு நிறைவு

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு வனத்துறை சாா்பில், வளமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும், தீா்வுகளும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

News image

மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் அமைச்சா் பி.கீதா ஜீவன். உடன் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:24 pm

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு வனத்துறை சாா்பில், வளமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும், தீா்வுகளும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி நிறைவு பெற்றதை அடுத்து, பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு 500 பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறை குறித்த பயிற்சி கையேட்டை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் இளையராஜா, மாவட்ட கல்வி அலுவலா் முனியசாமி, வனச்சரக அலுவலா் அஜய், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் செலின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.