எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 17 வயது சிறுவன் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை போலீஸாா் பிடித்து கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

News image

கைது

Updated On :11 பிப்ரவரி 2026, 7:32 pm

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை போலீஸாா் பிடித்து கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்தனமாரி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அதே சாலையில் கோயில் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த சிறுவனிடம் விசாரிக்க முயன்றபோது, அவன் போலீஸாரை அவதூறாகப் பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. போலீஸாா் சிறுவனை சோதனையிட்டபோது அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பதும், அவா் ப்ளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது.

இது குறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனைப் பிடித்து கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.