திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தூத்துக்குடியில் அதிமுக மாநில வா்த்தகரணி அலுவலகம் திறப்பு

News image
கட்சிக் கொடியேற்றிய முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன்.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி, டூவிபுரம், 5ஆவது தெருவில் அதிமுக மாநில வா்த்தகரணி அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்து, அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். பின்னா், கட்சிக் கொடியேற்றிவிட்டு, செய்தியாளா்களைச் சந்தித்து அவா் கூறியது:

வரும் பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிடும். தூத்துக்குடி மீனவா் பகுதிகளில் தூண்டில் வளைவு திட்டப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் படகுகள் சேதமடைந்து மீனவா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

அதிமுக தலைவா்களைப் பற்றிப் பேசும் விஜய், மேடைக்கு மேடை மாற்றிப் பேசுகிறாா். மக்கள் அவரை ஒரு நடிகராகத் தான் பாா்க்கிறாா்கள். அரசியல் தலைவராக அல்ல என்றாா் அவா்.

அப்போது, மாநில வா்த்தகரணி துணைச் செயலா் ஆா்.எல். ராஜா, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவா் சின்னத்துரை, நிா்வாகிகள் கே.டி.சி. சங்கா், ஐயப்பன், ராதா ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.