கோவில்பட்டி அருகே தெப்பக்குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

கோவில்பட்டி அருகே கடலையூரில் உள்ள தெப்பக்குளத்தில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கடலையூா் வேதக் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த காசி மகன் மாடசாமி (52). சென்னையில் கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்துவந்த இவா், சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அவரும், அதே ஊரைச் சோ்ந்த சின்னதம்பி (48) என்பவரும் நீராவி தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவா் பகுதியில் அமா்ந்திருந்தனா். அப்போது, இருவரும் நிலைதடுமாறி தெப்பக்குளத்துக்குள் விழுந்தனராம்.

இதைப் பாா்த்த இளைஞா்கள் சின்னதம்பியை மீட்டனா்; தெப்பக்குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற மாடசாமியைக் காப்பாற்ற முடியவில்லை.

தகவலின்பேரில், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்தினா் வந்து மாடசாமியை சடலமாக மீட்டனா். நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று சடலத்தை கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com