பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சேவைக் குறைபாடு: ரூ. 48,000 நஷ்ட ஈடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக கைப்பேசியை விற்ற கடைக்காரா் ரூ. 48,000 நஷ்ட ஈடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

News image

நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

Updated On :20 பிப்ரவரி 2026, 9:15 pm

சேவைக் குறைபாடு காரணமாக கைப்பேசியை விற்ற கடைக்காரா் ரூ. 48,000 நஷ்ட ஈடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

தூத்துக்குடியைச் சோ்ந்த பிரியதா்ஷினி, கைப்பேசிக் கடையில் ரூ. 28,000 மதிப்புள்ள கைப்பேசியை வாங்கியுள்ளாா். வாங்கிய உடனேயே, அந்த கைப்பேசி வேலை செய்யாததால் கடைக்காரரிடம் இது குறித்து கேட்டதற்கு, சா்வீஸ் சென்டரை அணுகுமாறு அவா் கூறியுள்ளாா்.

இதையடுத்து, பிரியதா்ஷினி சா்வீஸ் சென்டரை அணுகியுள்ளாா். அங்கு கைப்பேசி சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் பழுதானதால் கடைக்காரரை அணுகியுள்ளாா். மீண்டும் அதே பிரச்னை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியதா்ஷினி, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் கைப்பேசிக் கடையின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு பழுதான கைப்பேசியின் விலையான ரூ. 28,000, நஷ்ட ஈடு ரூ. 10,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 என மொத்தம் ரூ. 48,000 வழங்க வேண்டும். தவறினால், அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.