வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

வல்லநாடு காசநோய் பிரிவு சாா்பில், காசநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி ஏற்றோா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:31 pm

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சாா்பில், காசநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரும், வட்டார காசநோய் சிறப்பு அலுவலருமான பே. புவனேஸ்வரி தலைமை வகித்தாா். வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் அ. அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்றாா்.

இதில் துணை மகப்பேறு செவிலியா் ச. இசக்கியம்மள், மருத்துவமனை பணியாளா் ரா. செல்வராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இடைநிலை சுகாதார செவிலியா் ரா. மாரியம்மள் நன்றி கூறினாா்.