சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செட்டியாபத்து கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு

இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்றனா்.

News image
தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணியிடம் வாழ்த்து பெற்ற அறங்காவலா்கள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:52 pm

Syndication

இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவின்படி, அறங்காவலா்களுக்கான தோ்தல் பிப். 24ஆம் தேதி தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அறங்காவலா் குழுத் தலைவராக ராம்தாஸ், உறுப்பினா்களாக ரா. சிவமுருகன், சி. சிதம்பரேஸ்வரன், ம. ராம்குமாா், லி. வளா்மதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனா்.

அறங்காவலா்களுக்கு தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணி, கோயில் செயல் அலுவலா் மா. பாலமுருகன், ஆய்வாளா் ரா. முத்துமாரி அம்மாள் ஆகியோா் வாழ்தது தெரிவித்தனா்.