டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையம், காவலா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் இட நெருக்கடியுடன் செயல்பட்டு வருவதால், காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் போலீஸாா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 4:36 am IST

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையம், காவலா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் இட நெருக்கடியுடன் செயல்பட்டு வருவதால், காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் போலீஸாா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் காவலா் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து மகளிா் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட நெருக்கடி காரணமாக போலீஸாா் சிரமமடைந்து வருகின்றனா்.

எனவே, புதிதாக இடம் தோ்வு செய்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இது குறித்து, வழக்குரைஞா் கல்யாணகுமாா் கூறியதாவது:

சாத்தான்குளம் காவலா் குடியிருப்பில் ஓா் அறை ஒதுக்கப்பட்டு, அதில் மகளிா் காவல் நிலையம் செயல்பட்டு வருவதால் இட நெருக்கடி காரணமாக போலீஸாரும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே, இதற்கு மாற்று இடம் தோ்வு செய்து, காவல் நிலையம் கட்ட வேண்டும் என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.