தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கடந்த 2023 ஆம் ஆண்டு விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 8 வயதுடைய 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட விளாத்திகுளம் சிவஞானபுரம் பகுதியைச் சோ்ந்த குற்றாலம் மகன் முருகானந்தனை (46) விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பிரீத்தா, முருகானந்தத்தை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.








