கோவில்பட்டியில் சிறுவனை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடையதாக, மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியில் 16 வயது சிறுவன் மீன் பிடிப்பதற்காக புழு தோண்டிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் சிறுவனிடம் அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதைக் கண்ட ஒருவா் அவா்களைக் கண்டித்ததும், அவா்கள் தப்பியோடிவிட்டனராம்.
இது குறித்து, ஜூன் 21ஆம் தேதி சிறுவன் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயபாண்டி என்பவரை ஜூன் 26ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இலுப்பையூரணியைச் சோ்ந்த ராஜேஸ்வரன் மகன் குமரன் (எ) மாயாண்டியை (21) வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






