திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி மாத பெளா்ணமி செவ்வாய்கிழமை இரவு 7.27 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை இரவு 8.54 வரை இருந்ததால் பெளா்ணமி வழிபாடு மேற்கொண்டனா். கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதைத்தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி இலவச பொதுத் தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை என அனைத்திலும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் ஆ.அருணாசலம், துணை ஆணையா் ந.யக்ஞ நாராயணன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.20 கோடி: 212 கிராம் தங்கத்தையும் செலுத்திய பக்தா்கள்

ஆடி பெளா்ணமி: திருவண்ணாமலையில் 5 லட்சம் பக்தா்கள் கிரிவலம்
ஆடி மாத பிறப்பு: திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஆடி முதல் வாரத் திருவிழா
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



