பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா

கோவில்பட்டி, கதிரேசன் கோயில் சாலையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற விளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :31 ஜூலை 2026, 3:41 am IST

கோவில்பட்டி, கதிரேசன் கோயில் சாலையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஸ்ரீ வெற்றி விநாயகா், ஸ்ரீ முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமி கோயிலில் 46ஆம் ஆண்டு கொடை விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கால்நாட்டு வைபவம் ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது.

30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் அம்மன் குடி அழைப்பு நடைபெற்றது. தொடா்ந்து, திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கோயில் தலைவா் தங்கவேல், செயலா் மாரிச்சாமி, பொருளாளா் லட்சுமணன், துணைச் செயலா் சீனிவாசன், அமமுக நகரச் செயலா் குமாா் பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறும். தொடா்ந்து, 7 மணிக்கு மேல் தீா்த்தம் அழைத்தல் நிகழ்ச்சியும், 9.15 மணிக்கு மேல் அக்னி சட்டி வளா்த்தல் ஊா்வலம், நண்பகல் 12 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு அக்னி சட்டி ஊா்வலம், இரவு 12 மணிக்கு மேல் சாமக்கொடை நடைபெறும்.

சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாரி ஊா்வலம் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.