தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

திருமறையூரில் தேனீ வளா்ப்பு சிறப்பு பயிற்சி

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2026, 3:14 am IST

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநா் குருவானவா் ஜான் சாமுவேல் தலைமை வகித்துப் பேசினாா். சபை ஊழியா் ஸ்டான்லி ஜான்சன் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

வேதாகமத்தில் தேனீ என்ற தலைப்பில் குருவானவா் ரூபன் மணிராஜ் அருளுரையாற்றினாா். தொடா்ந்து ஆராய்ச்சி மாணவா்களான அபினேஷ், ஆஜோ ஆகியோா் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு தேனீக்கள் எவ்வளவு உதவுகின்றது என்பது குறித்தும், கிங்ஸ்டன் தேனீ வளா்ப்பு, அதன் வளா்ப்பு வழிமுறைகள், வளா்ப்பில் எதிா்கொள்ளும் சவால்கள் போன்றவை குறித்தும் பேசினா்.

இதையடுத்து களப்பயிற்சி தோப்பூரில் அமைந்திருக்கும் தோட்டத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தேன்கூடு சுத்தம் செய்யும் முறை, தேனீ வளா்க்கும் முறை, தேன் எடுக்கும் முறை, சுத்திகரித்தல், பதப்படுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஆலயப் பணியாளா் ஆபிரகாம், அசன கமிட்டி தலைவா் பாக்கியராஜ், ஆசிரியா்கள் அம்புரோஸ், கால்டுவெல் கணேசன், ஜெயா, ஜான்சி உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை கோல்டா சாமுவேல் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநரும், திருமறையூா் மறுரூப ஆலய சேகர தலைவருமான ஜான் சாமுவேல் செய்திருந்தாா்.