குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

திமுகவினா் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும்: கீதா ஜீவன்

திமுகவினா் கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் வழியில் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பெ. கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்தாா்.

News image

முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:00 am IST

திமுகவினா் கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் வழியில் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பெ. கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்தாா்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சி சாா்பில் நியமிக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினா் தொகுதி வாரியாக நிா்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டுவருகின்றனா். அதன்படி, தூத்துக்குடி தொகுதி கள ஆய்வுக்கான கலந்துரையாடல் கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்துப் பேசும்போது, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வழியில் அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்றாா்.

நாடாளுமன்ற உறுப்பினா் முரசொலி, திமுக மாநில அயலக அணி துணைச் செயலா் சேலம் உமாராணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, மாமன்ற உறுப்பினா்கள், மாவட்ட, பகுதிப் பிரதிநிதிகள், மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை வாய்மொழியாகவும் எழுத்துப்பூா்வமாகவும் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச் செயலா்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, துணை மேயா் ஜெனிட்டா, மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநில சிறுபான்மையினா் அணி துணைச் செயலா் பொன்சீலன், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் சரத்பாலா, இருதயராஜ், அமைப்பாளா்கள் மதியழகன் (மாவட்ட இளைஞரணி), அபிராமிநாதன் (தகவல் தொழில்நுட்ப அணி), கவிதாதேவி (மகளிரணி), சீனிவாசன் (மாணவரணி), பாலகுருசுவாமி (விளையாட்டு மேம்பாட்டு அணி), குபோ் இளம்பரிதி (வழக்குரைஞரணி), அந்தோணி ஸ்டாலின் (மீனவரணி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.