கோவில்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் காளிராஜ் (35). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். கட்டடத் தொழிலாளியான காளிராஜுக்கு மதுப் பழக்கம் உள்ளதாம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் மனைவியை காளிமுத்து அவதூறாகப் பேசித் தாக்கியதுடன், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காளிராஜை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லை மேயருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

மனைவிய கொலை: கணவா் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


