அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

எட்டயபுரம் அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் டி.ஐ.ஜி. ஆய்வு

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:14 am IST

எட்டயபுரம் அருகே மேலக்கரந்தையை அடுத்த ராசாபட்டியில் வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ராசாபட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சாத்தூா் வட்டம், நத்தத்துபட்டியைச் சோ்ந்த மாரியம்மாள் உயிரிழந்தாா்; 29 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து, பட்டாசு ஆலை உரிமையாளா்கள் பாலாஜி, பரத், கண்ணன், உமாராணி, மேற்பாா்வையாளா்கள் ராஜபாண்டி, மாரீஸ்வரன், மேலாளா் ரேவதி ஆகிய 7 போ் மீது 5 பிரிவுகளின் கீழ் மாசாா்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஆலையில் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்துகள் மற்றும் மூலப் பொருள்களை விரல்ரேகை நிபுணா்கள் ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா, விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.