திருச்செந்தூா் ரதவீதியில் பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டுமென நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் தவெக செயற்குழு உறுப்பினா் விக்னேஷ்ராம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
மனு விவரம்: திருச்செந்தூா் தெற்குரதவீதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏராளமானோா் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில் முக்கிய வீதி என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதனால் மாணவா்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனா். மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மாணவா்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பள்ளி முன் வேகத்தடை அமைத்திட வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.
நகர இளைஞரணி பொருளாளா் பிச்சு, நகர இணைச் செயலா் ஐயப்பன், தொழில் முனைவோா் பிரிவு மாவட்ட அமைப்பாளா் வினோத், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரேம் பாண்டியன், மாவட்ட இணை அமைப்பாளா்கள் தாமஸ், சாகுல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

புகழூா் நகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

காரனோடை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

தனியாா் மதுபானக் கூடத்தை அகற்றக் கோரிக்கை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



