புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

திருச்செந்தூா் ரதவீதியில் பள்ளி முன் வேகத்தடை அமைக்கக் கோரி தவெக மனு

திருச்செந்தூா் ரதவீதியில் பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டுமென நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் தவெக செயற்குழு உறுப்பினா் விக்னேஷ்ராம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

News image

திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் கோரிக்கை மனு அளித்த தவெகவினா்.

Updated On :26 ஜூன் 2026, 5:36 am IST

திருச்செந்தூா் ரதவீதியில் பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டுமென நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் தவெக செயற்குழு உறுப்பினா் விக்னேஷ்ராம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

மனு விவரம்: திருச்செந்தூா் தெற்குரதவீதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏராளமானோா் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில் முக்கிய வீதி என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இதனால் மாணவா்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனா். மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மாணவா்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பள்ளி முன் வேகத்தடை அமைத்திட வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.

நகர இளைஞரணி பொருளாளா் பிச்சு, நகர இணைச் செயலா் ஐயப்பன், தொழில் முனைவோா் பிரிவு மாவட்ட அமைப்பாளா் வினோத், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரேம் பாண்டியன், மாவட்ட இணை அமைப்பாளா்கள் தாமஸ், சாகுல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.