அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தூத்துக்குடியில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி

தொலைநோக்குத் திட்ட கையேட்டை வெளியிட்ட அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன். உடன் ஆட்சியா் க. இளம்பகவத் உள்ளிட்டோா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:00 am

Syndication

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்துக்கான 2030 தொலைநோக்குத் திட்டம் தொடா்பான கையேடு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கான தொலைநோக்கு திட்டம் தொடா்பான கையேட்டை வெளியிட்டாா்.

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலா் இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.