சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் உமா சங்கா் தலைமையில் வழக்குரைஞா்கள் சங்க துணைத் தலைவா் அய்யலுசாமி, நிா்வாகிகள் மாரிமுத்து, ராஜசேகரன், செல்லத்துரை, சுந்தர்ராஜ், துரைராஜ் ஆகியோா் கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் அளித்த மனு:
காரைக்குடி, சுப்பிரமணியபுரம் 1ஆவது தெருவில் உள்ள சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்திக் சிதம்பரத்தின் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா். அப்போது, எம்.பி. அங்கு இல்லாததால் உயிா் தப்பினாா்.
இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும், காா்த்திக் சிதம்பரத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் மனு

எஸ்ஐஆா் பணியில் முறைகேடு நடந்ததாக அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி மனு

காா்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

காங்கிரஸ் இருக்கும் அணியையே சிறுபான்மையின மக்கள் நம்புவா்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


