மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 11 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கடம்பூா், கே. சிதம்பரபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

Updated On :11 மார்ச் 2026, 7:54 pm

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கடம்பூா், கே. சிதம்பரபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், செண்பகப்பேரி கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மோகன், சின்னப்பன், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் துறையூா் கணேஷ் பாண்டியன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் பழனிச்சாமி, அழகா்சாமி, போடுசாமி, அன்புராஜ், செல்வகுமாா், வண்டானம் கருப்பசாமி, தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால், அமமுக ஒன்றியச் செயலா் மந்திரமூா்த்தி, பாஜக வடக்கு மாவட்ட பொருளாளா் சீனிவாசன், கயத்தாறு அதிமுக நகரச் செயலா் கப்பல் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.