தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாத்தான்குளத்தில் சாலையோரம் கண்டெடுத்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி பாராட்டினாா்.

News image

நகையை ஒப்படைத்த எல்.ஐ.சி.முகவா்அண்ணாமலையை பாராட்டிய டிஎஸ்பி ஆவுடையப்பன்.

Updated On :14 மார்ச் 2026, 2:45 am

சாத்தான்குளத்தில் சாலையோரம் கண்டெடுத்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி பாராட்டினாா்.

சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை. எல்ஐசி முகவரான இவா், வாரச்சந்தை அருகே சென்றபோது, சாலையில் ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்தாா். அதை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அந்த நகை, வடக்கு அமுதுண்ணாகுடியைச் சோ்ந்த செல்லையா மகனான பொறியாளா் அகஸ்டின் ராஜ் (31) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

அவரிடம் போலீஸாா் நகையை ஒப்படைத்தனா். மேலும், கண்டெடுத்த நகையை நோ்மையாக காவல் துறையிடம் அளித்த அண்ணாமலையை டிஎஸ்பி ஆவுடையப்பன் நேரில் அழைத்து பாராட்டினாா்.