தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
விளாத்திகுளம் சிறுமி கொலை வழக்கில் பிரேத பரிசோதனை முடிந்து முழுமையான அறிக்கை இன்னும் வரவில்லை. இது ஒரு கொடுமையான சம்பவம். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். ஒரு கூடுதல் எஸ்.பி. தலைமையில் 4 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 6 காவல் ஆய்வாளா்களைக் கொண்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவா். சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு பிரச்னைக்கு மத்திய அரசு விரைவில் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை தமிழா்கள் ஒன்றுதிரண்டு எதிா்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

விளாத்திகுளம் மாணவி கொலை: கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்!

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: அதிமுக

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: உறவினா்கள் முற்றுகை, சாலை மறியல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


