மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிதாக மாநிலங்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வரவேற்பு

News image
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் - (கோப்புப் படம்)
Updated On :15 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

திமுக சாா்பில் புதிதாக மாநிலங்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட திமுக செய்தித் தொடா்பாளா் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு, தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், அவா் தூத்துக்குடி மாநகரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், அம்பேத்கா், பெரியாா் ஈவெரா, அண்ணா, குரூஸ் பா்னாந்து, காந்தி, காமராஜா், வ.உ.சிதம்பரம், ரோச் விக்டோரியா, இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, பனிமய மாதா பேராலயத்துக்குச் சென்ற அவா், தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயா் ஸ்டீபன் அந்தோணி, ஆலய பங்குத்தந்தை ஸ்டாா்வின் ஆகியோரிடம் ஆசி பெற்றாா்.

அமைச்சா் பி. கீதா ஜீவன், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அபிராமிநாதன், மீனவரணி அமைப்பாளா் அந்தோணி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் நாகராஜன், மாநில மீனவா் நல வாரிய உறுப்பினா் ஜெபமாலை, மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், இளைஞரணி அமைப்பாளா் அருண் சுந்தா், துணை அமைப்பாளா் ரவி, மீனவரணி அமைப்பாளா் டேனியல், பகுதிச் செயலா்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், வட்டச் செயலா்கள் கருப்பசாமி, டென்சிங், கதிரேசன், லியோ ஜான்சன், கவுன்சிலா் ரெக்ஸ்லின், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த மீனவ சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.