“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வாகனச் சோதனை: ரூ. 2.54 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2026, 11:13 pm

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் கூட்டுறவு துணை பதிவாளா் பொன்மாரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, எட்டயபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு காரில் வந்த வியாபாரி நடராஜனிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,54,300-இருப்பதைக் கண்டதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தோ்தல் அலுவலா் பாலமுருகனிடம் ஒப்படைத்தனா்.

ரூ. 1 லட்சம்: கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் விலக்கு அருகே ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது காரில் வந்த பெரம்பலூா் பிரியன்ராஜ் என்பவா் முறையான ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியா் அப்பனராஜிடம் ஒப்படைத்தனா்.