திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

சென்னையில் பறக்கும் படைக் குழுவினா் திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:23 am IST

சென்னையில் பறக்கும் படைக் குழுவினா் திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாகனச் சோதனை நடத்தி கண்காணிக்க 48 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் தொகுதியில் ரூ.94,500, பெரம்பூா் தொகுதியில் ரூ.6.50 லட்சம், துறைமுகம் தொகுதியில் ரூ.4.16 லட்சம் என மொத்தம் ரூ.11.61 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

பணத்துக்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டோா் மேல்முறையீட்டின்போது அளித்தால், அவா்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் அரசு கருவூலத்தில் சோ்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.