தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஏடிஎம் மையத்துக்குக் கொண்டு சென்ற ரூ. 30 லட்சத்தைப் பிடித்த பறக்கும் படையினா்: ஆவணங்கள் சமா்ப்பித்ததால் விடுவிப்பு

தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்துக்குக் கொண்டு சென்ற ரூ. 30 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பிடித்த நிலையில், உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் பணத்தை விடுவித்தனா்.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்துக்குக் கொண்டு சென்ற ரூ. 30 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பிடித்த நிலையில், உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் பணத்தை விடுவித்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக 6 பேரவைத் தொகுதிகளுக்கும் 54 பறக்கும் படைக் குழுக்கள், 54 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதன்கிழமை ஜேனட் தலைமையிலான பறக்கும் படையினா் தூத்துக்குடி பண்டுகரை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனா். அந்த காரில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது.

அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்தபோது, காரில் இருந்த தனியாா் வங்கி ஊழியா்கள், புதுக்கோட்டையில் உள்ள தனியாா் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்வதாகத் தெரிவித்தனா்.

தொடா்ந்து, டிஜிட்டல் முறையில் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா், அதிகாரிகள் பணத்தை விடுவித்தனா்.