தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது

விளாத்திகுளத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோவில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

விளாத்திகுளத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோவில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விளாத்திகுளத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (45). இவா், செவ்வாய்க்கிழமை மாலை அந்தப் பகுதியில் வீட்டுவாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தச் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.