தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2026, 9:02 pm

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்குச் சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகள் மூலமாக நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு 1 மற்றும் 2ஆவது அலகுகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 அலகுகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, மற்ற 3 அலகுகள் மூலமாக 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 5ஆவது அலகில் உள்ள டா்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.