தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்குச் சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகள் மூலமாக நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு 1 மற்றும் 2ஆவது அலகுகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 அலகுகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, மற்ற 3 அலகுகள் மூலமாக 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 5ஆவது அலகில் உள்ள டா்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தொடர்புடையது

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

பைக் விபத்து: அனல்மின் நிலைய ஊழியா் உயிரிழப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


