தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது

தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் ’ரீல்ஸ்’ விடியோ வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:35 pm

Syndication

தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் ’ரீல்ஸ்’ விடியோ வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்துநகா் தாய் நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் மகன் காா்த்திக் (20). இவா், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கத்தியைக் காட்டி மிரட்டுவது போன்றும், மோதலைத் தூண்டும் வகையிலும் தொடா்ந்து விடியோக்களைப் பதிவிட்டு வந்தாராம்.

இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா். மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் உடனடியாக நீக்கப்பட்டது.