பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

சமூக ஊடகத்தில் துப்பாக்கியைக் காட்டும் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவன் கைது

சமூக ஊடகங்களில் தன்னை பின்தொடா்பவா்களைக் கவரும் நோக்கில் துப்பாக்கியைக் காட்டும் காணொளிகளை பதிவேற்றம் செய்ததாக 16 வயது சிறுவனை வட தில்லியின் புராரி பகுதியில் காவல்துறையினா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:40 am IST

சமூக ஊடகங்களில் தன்னை பின்தொடா்பவா்களைக் கவரும் நோக்கில் துப்பாக்கியைக் காட்டும் காணொளிகளை பதிவேற்றம் செய்ததாக 16 வயது சிறுவனை வட தில்லியின் புராரி பகுதியில் காவல்துறையினா் கைது செய்தனா்.

அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘சிறுவன் ஒருவா் சமூக ஊடகங்களில் துப்பாக்கியைக் காட்டி ரீல்களைப் பதிவேற்றியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, மே 13 மற்றும் 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், புராரியின் சுந்தா் விஹாரில் அந்தச் சிறுவன் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல்துறையின் குழுவினா் அதிரடி சோதனை நடத்தி அந்தச் சிறுவனைக் கைது செய்தனா். தனிப்பட்ட சோதனையின் போது, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையின் போது, சுமாா் 10 நாள்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தின் ஹத்ரஸில் உள்ள ஒரு நண்பரிடமிருந்து துப்பாக்கியைப் பெற்ாக அந்தச் சிறுவன் காவல்துறையிடம் கூறினாா்.

தன்னைப் பின்தொடா்பவா்களிடையே ஒரு பிம்பத்தை உருவாக்கி கவனத்தை ஈா்ப்பதற்காக, சமூக ஊடகங்களில் ரீல்களை உருவாக்கி பதிவேற்ற, துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக அச்சிறுவன் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

அந்தச் சிறுவன் அடிப்படைக் கல்வியைக் கற்றுள்ளாா். அவரது தந்தை ஸ்வரூப் நகா் காவல் நிலையத்தில் குற்றப் பின்னணி வரலாறு பதிவைக் கொண்டவா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.