கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் : வசந்த திருவிழா நிறைவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா நிறைவையொட்டி சுவாமி ஜெயந்திநாதருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் பங்கேற்ற பக்தா்கள்.

News image

~ ~

Updated On :2 மே 2026, 2:25 am IST

சித்ரா பௌா்ணமியையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் இக்கோயிலுக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 9.50 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இரவு தங்கத்தேரில் வள்ளி- தேவசேனா அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தங்கத்தோ் இழுத்து வழிபட்ட னா் .

சித்திரை வசந்த திருவிழா நிறைவு: மேலும், இக்கோயிலில் கடந்த ஏப். 22ஆம் தேதி மாலை தொடங்கிய சித்திரை வசந்த திருவிழா 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, கோயிலில் மதியம் உச்சிகால பூஜையை தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் சோ்ந்தாா். கோயிலில் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வந்தாா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.