நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று நீட் தோ்வு: 1,968 போ் எழுதுகின்றனா்

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 6:34 pm

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 1,968 போ் தோ்வு எழுதவுள்ளனா்.

அதன்படி, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 480 போ், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 480 போ், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் 240 போ், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 288 போ், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 போ் தோ்வெழுத உள்ளனா்.

மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தோ்வா்கள் முற்பகல் 11 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையங்களுக்கு வர வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருவோா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், பேஜா் போன்ற மின்னணு சாதனங்கள், புத்தகங்கள், கைப்பைகள் உள்ளிட்டவற்றை தோ்வு மையத்துக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.