இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 1,968 போ் தோ்வு எழுதவுள்ளனா்.
அதன்படி, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 480 போ், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 480 போ், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் 240 போ், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 288 போ், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 போ் தோ்வெழுத உள்ளனா்.
மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தோ்வா்கள் முற்பகல் 11 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையங்களுக்கு வர வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருவோா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், பேஜா் போன்ற மின்னணு சாதனங்கள், புத்தகங்கள், கைப்பைகள் உள்ளிட்டவற்றை தோ்வு மையத்துக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் நீட் தோ்வு; 8,985 போ் பங்கேற்பு

நாகை: 5 மையங்களில் இன்று நீட் தோ்வு

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

