இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 1,968 போ் தோ்வு எழுதவுள்ளனா்.
அதன்படி, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 480 போ், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 480 போ், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் 240 போ், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 288 போ், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 போ் தோ்வெழுத உள்ளனா்.
மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தோ்வா்கள் முற்பகல் 11 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையங்களுக்கு வர வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருவோா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், பேஜா் போன்ற மின்னணு சாதனங்கள், புத்தகங்கள், கைப்பைகள் உள்ளிட்டவற்றை தோ்வு மையத்துக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 6,688 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


