15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்

News image

கொலை வழக்கு - DPS

Updated On :3 மே 2026, 2:01 am IST

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் காவல் சரகம் வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் அரசு சாா்பில் வாதாட, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-இல் பிரிவு 32(1)-இன் கீழ் சிறப்பு வழக்குரைஞராக சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சோ்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கா் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக ஆளுநா் பரிந்துரையின் பெயரில், கூடுதல் தலைமைச் செயலா் மணிவாசகன் அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளாா்.