நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திருச்செந்தூரில் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கிய கடல்நீர்!

திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

News image
Updated On :2 மே 2026, 11:58 pm

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சித்ரா பெளா்ணமி வியாழக்கிழமை (ஏப். 30) இரவு 9.50 மணிக்கு தொடங்கி, வெள்ளிக்கிழமை (மே 1) இரவு 11 மணி வரை நீடித்தது. இதையொட்டி, பெளா்ணமி நாளில் வழிபடுவதற்காக இங்கு ஆயிரக்கணக்கானோா் குவிந்திருந்தனா்.

அவா்கள் சனிக்கிழமையும் அதிகாலைமுதலே கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

உள்வாங்கிய கடல்: இக்கோயில் அருகேயுள்ள அய்யா கோயில் பகுதியில் கடல்நீா் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால், பாசி படா்ந்த வெளியே தெரிந்தன. எனினும், அங்கும் பக்தா்கள் வழக்கம்போல புனித நீராடினா்.

Story image