நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வாகனங்களில் குப்பைகளை மூடி எடுத்துச் செல்ல வலியுறுத்தல்

News image
Updated On :3 மே 2026, 5:31 am IST

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை வலைதூணிகளை கொண்டு மூடி எடுத்து செல்ல பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை மினி லாரி போன்ற சுமை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, திட்டங்குளம் அருகே சிதம்பராபுரத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கிற்கு தூய்மைப் பயணியாளா் கொண்டு செல்வாா்கள்.

அவ்வாறு கொண்டு சொல்லும்போது, மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை முறையாக மூடுவதில்லை. குப்பைகள் பறந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் பாதசாரிகள், வாகனங்களில் மீது விழுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனா். சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் சிதறி அசுத்தமாகவும் காணப்படுகின்றன.

எனவே, தாா்ப்பாய் அல்லது வலைதுணியை கொண்டு முறையாக மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.